மேட்டூர், ஜூன் 13: மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஜலகண்டபுரம், எடப்பாடி, கெங்கணாபுரம், பூலாம்பட்டி, மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 400 கொப்பரைத் தேங்காய் மூட்டைககள் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
ஈரோடு மற்றும் சேலம் வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கொப்பரைகள் முதல் தரம் ரூ. 78 முதல் ரூ. 86.65 வரையும், இரண்டாம் தரம் கிலோ ரூ. 62 முதல் ரூ. 76 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 16 லட்சத்துக்கு 400 கொப்பரை மூட்டைகள் ஏலம் போனது.