சங்ககிரி,ஜூன் 13: தருமபுரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பணியாற்றி வந்த எம்.மேகலாமைதிலி பதவி உயர்வு பெற்று சங்ககிரி சார்பு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சங்ககிரி சார்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த இ. ராஜேந்திர கண்ணன், தருமபுரி மாவட்ட சட்ட உதவி ஆணையத்தின் செயலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.