மின்சாரம் பாய்ந்ததில் ஒப்பந்தத் தொழிலாளி பலி

வாழப்பாடியில் மின்சாரம் பாய்ந்ததில், மின் வாரிய ஒப்பந்தத்  தொழிலாளி உயிரிழந்தார்.  

வாழப்பாடி, ஜூன் 13: வாழப்பாடியில் மின்சாரம் பாய்ந்ததில், மின் வாரிய ஒப்பந்தத்  தொழிலாளி உயிரிழந்தார்.  
வாழப்பாடியை அடுத்த வி. மன்னார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினவேல் மகன் சதாசிவம் (25). இவர், வாழப்பாடி தெற்கு பிரிவு மின்வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வியாழக்கிழமை மின் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மின்வாரிய நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந் நிலையில் வாழப்பாடி பேரூராட்சியில் பெரியசாமி நகரில் வீடுகள் கட்டி விற்பனை செய்து வரும் தனியாருக்குச் சொந்தமான வீட்டுமனை பகுதியில் சென்ற மின் பாதையை மாற்றி அமைக்கும் பணியில் மின்வாரிய மற்றும் ஒப்பந்த கூலித் தொழிலாளர்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது மின் கம்பத்தில் ஏறிய ஒப்பந்தத் தொழிலாளி சதாசிவம், மின்பாதையை மாற்றியமைக்கும் பணியை மேற்கொண்டபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.   வாழப்பாடி போலீஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர். 
மின் வாரிய பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்களை அழைத்துச் சென்று உரிய பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றாமல் பணியில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com