மேட்டூர், ஜூன் 13: மேட்டூர் அணை பூங்கா-வுக்கு வரும் பார்வையாளர்களின் கூட்டம் வெகுவாக குறைந்தது. சேலம் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மேட்டூர் அணை பூங்காவுக்கும் வந்து செல்வது வழக்கம்.
மேட்டூர் அணையை ஒட்டி 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மேட்டூர் அணை பூங்கா. இங்கு பார்வையாளர்களை கவருவதற்கு பல்வேறு சிற்பங்களும், மான் பண்ணை, பாம்பு பண்ணை போன்றவைகளும் உள்ளன.
சிறுவர், சிறுமியரை மகிழ்விக்க சிறுவர் பூங்காவில் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் போன்றவைகளும் உள்ளன.
கோடை விடுமுறை தினங்களில் நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கு குறையாமல் பார்வையாளர்கள் வந்து சென்றனர். தற்போது பள்ளிகள் துவங்கிவிட்டபடியால் பார்வையாளர்கள் கூட்டம் வெகுவாக குறைந்து போனது. வியாழக்கிழமை மேட்டூர் அணை பூங்காவுக்கு 1,560 பார்வையாளர்கள் மட்டுமே வந்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ரூ. 7,830 வசூலானது.