எடப்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இன்று புதன்கிழமை எடப்பாடி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து எடப்பாடி மின்சார வாரியக் கோட்டப் பொறியாளர் செல்வம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
எடப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ஜூன் 19ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எடப்பாடி துணை மின் நிலைய மின் விநியோக பகுதிகளான எடப்பாடி நகரம், வெள்ளர்நாயக்கன்பாளையம், ஆவணியூர், தாதாபுரம், வேம்பனேரி, குரும்பப்பட்டி, மலையனூர், வேலம்மாவலசு, தங்காயூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.