எடப்பாடி பகுதியில் ஜூன் 18 மின் நிறுத்தம்

எடப்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இன்று  புதன்கிழமை எடப்பாடி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

எடப்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இன்று  புதன்கிழமை எடப்பாடி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து எடப்பாடி மின்சார வாரியக் கோட்டப் பொறியாளர் செல்வம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
எடப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ஜூன் 19ஆம் தேதி  புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனால்  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எடப்பாடி துணை மின் நிலைய மின் விநியோக பகுதிகளான எடப்பாடி நகரம், வெள்ளர்நாயக்கன்பாளையம், ஆவணியூர், தாதாபுரம், வேம்பனேரி, குரும்பப்பட்டி, மலையனூர்,  வேலம்மாவலசு, தங்காயூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com