சேலம்
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் 4ஆம் நாள் நிகழ்ச்சி
ஆத்தூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மயான சூறைத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மயான சூறைத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நான்காம் நாள் திருவிழாவில் அங்காளம்மன், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மேலும் இரவு பிள்ளைப்பாவு (குடல் பிடுங்கி மாலை) ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்டளைதாரர்களான விஸ்வகர்மா சமூகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் வீரபத்திரர் வேடமணிந்து கோயில் நிர்வாகி ஏ.ஜி.இராமச்சந்திரன் சென்றார்.நிகழ்ச்சியை கோயில் நிர்வாக அறங்காவலர் பி.கங்காதரன்,துணைத் தலைவர் பி.மூர்த்தி,விழாக் குழுத் தலைவர் டி.குழந்தைவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.