திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை எடப்பாடியில் நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை எடப்பாடியில் நடைபெற்றது.
மாநில தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் டாக்டர் ஏ.கே. தருண் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். திருநாவுக்கரசு வரவேற்றார். மேற்கு மாவட்ட துணைத் தலைவர் சம்பத்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட  மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் பேசுகையில், தி.மு.க தொழில்நுட்ப அணியினர்,  வரும் மக்களவை தேர்தல் நேரத்தில், தேர்தல்  ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எவ்வாறு செயலாற்ற வேண்டும் என விளக்கிக் கூறினார். மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம், நகரச் செயலாளர் டி.எம்.எஸ்.பாஷா, மாவட்ட தொழில்நுட்ப பிரிவுத் துணைச் செயலாளர்கள் செல்வராஜ், சண்முகம், சட்டப்பேரவைத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஜி. முரளி, சதீஷ்குமார், சங்கர் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com