வீரபாண்டி ஒன்றியம், கடத்தூர் ஊராட்சிப் பகுதியில் மாட்டு இனங்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாட்டு இனங்களான பசு, காளை மாடு, எருமை உள்ளிட்ட 600 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
இந்தத் தடுப்பூசியானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் போடப்படும். இந்த முகாமை சேலம் மண்டல கால்நடை துறை இணை இயக்குனர் புருஷோத்தமன் துவக்கி வைத்தார். மேலும், துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் தேவேந்திரன், கால்நடை மருத்துவர்கள் தயாளன், ரமேஷ், விவேகானந்தன், கண்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.