இளம்பெண் தற்கொலை: கணவர் உள்பட இருவர் கைது

ஆத்தூரை அடுத்த நரிக்குறவர் காலனியில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

ஆத்தூரை அடுத்த நரிக்குறவர் காலனியில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமியாரை போலீஸார் கைது செய்தனர். 
ஆத்தூரை அடுத்துள்ள நரிக்குறவர் காலனி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் ஸ்ரீதரன் (35). விவசாயி. இவரது மனைவி பிரபா (29). இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 10 வயதில் மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் தம்பதி இடையே கடந்த 15 -ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் மனமுடைந்த பிரபா  விஷமருந்தினார். தகவல் அறிந்த உறவினர்கள், பிரபாவை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.இதனையடுத்து தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  
அங்கு சிகிச்சை பலனின்றி பிரபா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். தகவல் அறிந்த ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் கே.முருகேசன் வழக்குப் பதிவு செய்து பிரபாவின் கணவர் ஸ்ரீதரன்,  மாமியார் சகுந்தலாவை ஆகியோரைக் கைது செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com