தேர்தல் விழிப்புணர்வு வாகனப் பேரணி
By DIN | Published On : 28th March 2019 09:17 AM | Last Updated : 28th March 2019 09:17 AM | அ+அ அ- |

காகாபாளையம் பகுதியில் உள்ள நாலெட்ஜ் கல்லூரியில் மக்களவைத் தேர்தல் குறித்து கல்லூரி மாணவ, மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்முறை விளக்க வாகனப் பேரணி நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் எம். ஜெகநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் கல்லூரியில் மாணவிகள் தேர்தல் குறித்து விழிப்புணர்வுக்காக வண்ணக்கோலம் இட்டிருந்தனர். வாக்களிக்கும் மாதிரி இயந்திரம் அனைவரும் வாக்களிக்கும் உறுதிமொழியும், கையொப்பமும் இட்டு ஏற்றக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் நாலெட்ஜ் கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.எஸ். சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.