வேலைவாய்ப்பு தருவதாக மத்திய அரசு ஏமாற்றியது: வைகோ

ஆத்தூரில் திமுக வேட்பாளர் பொன். கெளதம சிகாமணியை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்தார்.

ஆத்தூரில் திமுக வேட்பாளர் பொன். கெளதம சிகாமணியை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்தார்.
கூட்டத்தில் ஆத்தூர் நகரச் செயலாளர் கே. பாலசுப்ரணியம் வரவேற்றார். 
அப்போது அவர் பேசியதாவது:
மத்தியில் ஆட்சி அமைந்தால் வருடந்தோறும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவித்த பிரதமர் மோடி 2 ஆயிரம் பேருக்குக் கூட வேலை வழங்கவில்லை.
மேலும் புது தில்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு செவி சாய்க்காத, கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பார்வையிடாத பிரதமர் மோடி தற்போது வாக்குகள் மட்டும் கேட்க ஓடி வருகிறார்.
இங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர். புதுதில்லியில் நாடாளுமன்றத்தில் உங்களது குறைகளை எடுத்துக் கூறி கள்ளக்குறிச்சி பாராளுமன்றத் தொகுதிக்கு பெருமை சேர்ப்பார் என பேசினார்.
அவருடன் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் வி. பி. துரைசாமி விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க. பொன்முடி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ஆ. ராஜா, இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் எஸ்.கே. அர்த்தனாரி, மதிமுக மாவட்ட செயலாளர் வ. கோபால் ராசு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.கே.எஸ். ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் வி.சி. நாராயணன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அ. மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் ஏ.கே. நசீர் அஹமத், மாவட்ட செயலாளர் ஏ.அன்சர் பாஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  நரசிங்கபுரம் நகரச் செயலாளர் என்.பி. வேல்முருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com