சேலம் - விருத்தாசலம் பிரிவில் மே 7-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு பயணச்சீட்டு பரிசோதனை நடத்தப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்தது.
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம்- ஆத்தூர், சின்னசேலம், விருத்தாசலம் பிரிவில் மே 7, 8, 9 ஆகிய மூன்று நாள்களுக்கு பயணச்சீட்டு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
ரயிலில் போதிய பயணச்சீட்டு இல்லாமல் பயணிகளால் வருவாய் இழப்பை சரி செய்யவும், பயணிகள் உரிய பயணச்சீட்டுடன் பயணம் செய்ய ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பரிசோதனை நடத்தப்படுவதாக, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.