சேலம் அஸ்தம்பட்டி காக்காயன்காடு மின் மயானத்தில்பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மே 16 முதல் 5 நாள்களுக்கு மின்மயான செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியது:-
அஸ்தம்பட்டி காக்காயன்காடு மின் மயானத்தில் மே 16 முதல் மே 20 ஆம் தேதி வரையிலான 5 நாள்கள் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, பராமரிப்பு நாள்களில் சடலங்களை எரியூட்டுவதற்கு சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 28-இல் செவ்வாய்பேட்டை மின்மயானம், கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 60-இல் சீலநாயக்கன்பட்டி மின்மயானம் ஆகிய மின்மயானங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என சதீஷ் தெரிவித்துள்ளார்.