ஏற்காட்டில் உள்ள ஏரி பூங்கா சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.
சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை, இயற்கையாக ஏரி அருகில் அமைந்துள்ள பூங்கா மிகவும் கவர்ந்துள்ளது.
இந்த ஏரி பூங்காவில், நிழல் தரும் செண்பக மரங்கள், சால்விய மலர், டேலியா மலர், புல் தரைகள், செயற்கை நீர் ஊற்றுகள், சாமந்தி மலர், பல வடிவங்களாக வடிவமைக்கப்பட்ட குரோட்டன்கள் போன்றவை சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளன.
ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிற்பகலில் ஏரி பூங்காவில் அமர்ந்து உணவு உண்டு, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்கின்றனர்.