கமல்ஹாசன் அரசியல்,  சுய லாபத்துக்காகப் பேசுகிறார்: மன்னார்குடி ஜீயர் சுவாமிகள்

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்காகவும்,  சுய லாபத்துக்காகவும் பேசி வருகிறார் என மன்னார்குடி அஹோபில மடம் ஸ்ரீ செண்டலங்கார ஜீயர் சுவாமிகள் தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்காகவும்,  சுய லாபத்துக்காகவும் பேசி வருகிறார் என மன்னார்குடி அஹோபில மடம் ஸ்ரீ செண்டலங்கார ஜீயர் சுவாமிகள் தெரிவித்தார்.
சேலம் வந்த அவர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஒரே அர்த்தத்தைத்தான் குறிப்பிடுகின்றன.அரசியலுக்காகவும், சுய லாபத்துக்காகவும் நடிகர் கமல்ஹாசன்  இதுபோன்று பேசுகிறார்.   அகில பாரத சன்னியாசி சங்கத்தின் மூலம் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்.  இந்து கலாசாரம் பற்றி அவருக்குத் தெரியவில்லை. இந்து விரோதச் செயலில் ஈடுபட்டால், அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com