முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
கடையின் பூட்டு உடைத்து திருட்டு
By DIN | Published On : 18th May 2019 09:14 AM | Last Updated : 18th May 2019 09:14 AM | அ+அ அ- |

கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த பாபு, இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த ஒரு வருடமாக எலக்ட்ரானிக்ஸ் கடையும் வைத்து நடத்தி வருகிறார்.
இவர் வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். பின்னர் வெள்ளிக்கிழமை காலையில் கடையைத் திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து இருந்ததும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிஸ் பொருள்கள் திருடு போயிருப்பதும் தெரியவந்தது.
புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.