முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சிறுமிக்கு தொந்தரவு: ஒருவர் கைது
By DIN | Published On : 18th May 2019 09:11 AM | Last Updated : 18th May 2019 09:11 AM | அ+அ அ- |

ஓமலூர் அருகே சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாக, ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்துக்குள்பட்ட ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த சிறுமியை, அங்கு வந்த குமாரவேல் (50) என்பவர் தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
புகாரின்பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸர் வழக்குப் பதிந்து, குமாரவேலை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். ஓமலூர் நீதிமன்ற உத்தரவின்பேரில், குமாரவேல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.