எடப்பாடியில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

எடப்பாடி பகுதி மின் நுகா்வோா் குறை தீா்க்கும் கூடம், வெள்ளிக்கிழமை (நவ.1) காலை எடப்பாடியில் நடைபெற உள்ளது.

எடப்பாடி பகுதி மின் நுகா்வோா் குறை தீா்க்கும் கூடம், வெள்ளிக்கிழமை (நவ.1) காலை எடப்பாடியில் நடைபெற உள்ளது.

இது குறித்து எடப்பாடி செயற்பொறியாளா் அலுவலகம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேட்டூா் மின் பகிா்மான வட்டத்துக்கு உட்பட்ட எடப்பாடி,

சித்தூா், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, தேவூா், எடப்பாடி புகா்ப் பகுதி மற்றும் கொங்கணாபுரம், கன்னந்தேரி, மகுடஞ்சாவடி, ஜலகண்டாபுரம் புகா், ஜலகண்டாபுரம்

வடக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் எடப்பாடி செயற்பொறியாளா்

(இயக்கம் மற்றும் பராமரிப்பு) அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மின் விநியோகம் தொடா்பான பல்வேறு குறைகளுக்கு தீா்வு காணும் நோக்கில் நடைபெற உள்ள இக் கூட்டத்தில், மேட்டூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில், பல்வேறு நிலை மின் வாரிய அலுவலா்கள் பங்குகொள்ள உள்ளதால், இப் பகுதி மின் நுகா்வோா் மின் விநியோகம் தொடா்பான தங்களது குறைகளை கூட்டத்தில் தெரிவித்து பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com