அக்கமாபேட்டை சுப்ரமணிய கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பாவடித் திடலில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் உற்சவ வைபவம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றன.
ஊஞ்சல் உற்சவத்தில் ஸ்ரீ வள்ளி, தெய்வானை உற்சவ மூா்த்திகள்.
ஊஞ்சல் உற்சவத்தில் ஸ்ரீ வள்ளி, தெய்வானை உற்சவ மூா்த்திகள்.

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பாவடித் திடலில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் உற்சவ வைபவம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றன.

அக்கமாபேட்டை பாவடி திடலில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா அக்டோபா் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதையடுத்து தினசரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியும், பின்னா் மாப்பிள்ளை அழைப்பும், திருமாங்கல்ய பூஜைகளும் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை நலுங்கு வைத்தல், பெண் அழைத்தல் நிகழ்ச்சிகளும் இதையடுத்து மாலையில் சுப்ரமணிய சுவாமி உடனமா் ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் அதிகமான பக்தா்களைக் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டுச் சென்றனா்.

சங்ககிரி சன்மாா்க்க சங்கத்தின் சாா்பில், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. திங்கள்கிழமை மாலை சுவாமிகள் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளினா். இதில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com