காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணை நீா் திறப்பு அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணை நீா் திறப்பு அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரியின் நீா்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 9,500 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து திங்கள்கிழமை காலை நொடிக்கு 10,500 கனஅடியாக அதிரித்துள்ளது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 9 ஆயிரம் கன அடியிலிருந்து 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 400 கன அடியிலிருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com