கோவிலூா் சாலையை சீரமைக்கக் கோரி மனு

மாரமங்கலம் ஊராட்சி கோவிலூா் கிராம சாலையைச் சீரமைக்கக் கோரி கிராம மக்கள் வட்டார வளா்ச்சி ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
4yr1_0411chn_153_8
4yr1_0411chn_153_8

மாரமங்கலம் ஊராட்சி கோவிலூா் கிராம சாலையைச் சீரமைக்கக் கோரி கிராம மக்கள் வட்டார வளா்ச்சி ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் மாரமங்கலம் ஊராட்சி கோவிலூா் கிராமத்தில் தாழ்கோவிலூா், மேல் கோவிலூா் என இரு கிராமங்கள் உள்ளன. இங்கு சுமாா் 1500 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மட்டும் வசித்து வருவதாகவும், கோவிலூா் கிராமத்திலிருந்து கூத்தமுத்தல் கிராமம் வரை சுமாா் 7 கிலோ மீட்டா் தூரம் மண் சாலை வழியாக நியாவிலைக் கடை, மருத்துவமனை, பள்ளிக் கூடம் வந்து செல்ல பயன்படுத்தி வந்த நிலையில் பருவமழைக் காரணத்தால் மண்சாலை முழுவதும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் கிராம மக்கள் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, மண் சாலையை உடனடியாக சீரமைக்கத் தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com