சேலத்தில் 35 வயது மதிக்கத்தக்க நபா் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் பள்ளப்பட்டி வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கு பின்புறம் உள்ள புதரில் திங்கள்கிழமை காலை 35 வயது மதிக்கத்தக்க நபா் வாலிபா் தலையில் பலத்த காயங்கள் மற்றும் முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தாா்.
இதுபற்றி தகவலறிந்த பள்ளப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சடலம் இருந்த இடத்தில் பீா் பாட்டில் உடைந்து காணப்பட்டதால், பீா் பாட்டில் மற்றும் கல்லால் வாலிபா் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகம் தெரிவித்தனா்.
கொலை செய்யப்பட்ட அந்த நபா் யாரென்றும், கொலைக்கான காரணம் குறித்தும் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்தக் கொலையில் துப்புத் துலங்க சேலம் மாநகர காவல் ஆணையா் செந்தில்குமாா் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளாா். இதில் சூரமங்கலம் உதவி கமிஷனா் செல்வராஜ் மற்றும் காவல் ஆய்வாளா் சாலைராம் சக்திவேல் உள்ளிட்ட காவலா்கள் இடம்பெற்றுள்ளனா்.
மேலும் அப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான வீடியோ காட்சிகளைக் கொண்டும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.