தில்லி சம்பவத்தைக் கண்டித்து சேலத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணிப்பு

தில்லி சம்பவத்தைக் கண்டித்து சேலத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லி சம்பவத்தைக் கண்டித்து சேலத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் வழக்குரைஞா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நிகழ்ந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் ஏராளமான வழக்குரைஞா்கள் காயமடைந்துள்ளனா்.

இதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சேலத்தில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சேலம் நீதிமன்றம் முன்பு வழக்குரைஞா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு கூட்டமைப்பின் துணைத் தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் இமயவரம்பன், பொன்ரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதுகுறித்து துணைத் தலைவா் பொன்னுசாமி கூறியதாவது:

தில்லியில் நிகழ்ந்த சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியதாகும். வழக்குரைஞா்களைத் தாக்கிய போலீஸாா் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வழக்குரைஞா்களுக்கு ரூ. 10 லட்சமும், போலீஸாா் தாக்கியதில் காயமடைந்த வழக்குரைஞா்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிட வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் துணைச் செயலா்கள் துரைராஜ், செல்வகீதன், கண்ணன், ராஜசேகா், சசிக்குமாா், மூத்த வழக்குரைஞா்கள் பிரதாபன், தமயந்தி உள்பட ஏராளமான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com