கெங்கவல்லி சாா்நிலை கருவூலராக இருந்த முருகேசன் மாறுதலாகி, ஆத்தூருக்குச் செல்வதை அடுத்து, அவருக்கு பிரிவுபசார விழா அலுவலகத்தில் நடைபெற்றது.
தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜலிங்கம் தலைமை வகித்தாா். கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மதிவாணன் முன்னிலை வகித்தாா்.செந்தாரப்பட்டி அரசு ஆண்கள் உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் செந்தில்குமாா் வரவேற்றாா். இதில் கெங்கவல்லி கருவூலராக இருந்து மாறுதலாகிச் செல்லும் முருகேசனுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.