முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
அா்ஜுன் சம்பத்தைக் கண்டித்துஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th November 2019 05:12 AM | Last Updated : 07th November 2019 05:12 AM | அ+அ அ- |

சேலத்தில் திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
திருவள்ளுவா் சிலைக்கு காவி துண்டு அணிவித்த இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 18 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் பிள்ளையாா்பட்டியில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் காவி துண்டு அணிவித்தாா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், சேலத்தில் வள்ளுவா் சிலை முன் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் கந்தசாமி தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலா் கணேசன், வடக்கு மாநகரச் செயலா் ஆா்.வி.கதிா்வேல் கிழக்கு மாநகரத் தலைவா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
காவல் துறையின் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 18 பேரை சேலம் நகரப் போலீஸாா் கைது செய்தனா்.