இடங்கணசாலையில் டெங்கு ஒழிப்புப் பணி

இடங்கணசாலை பேரூராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்புப் பணி தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றது.
பரமகவுண்டனூரில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநா் முருகன் உள்ளிட்டோா்.
பரமகவுண்டனூரில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநா் முருகன் உள்ளிட்டோா்.

இடங்கணசாலை பேரூராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்புப் பணி தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றது.

பேரூராட்சி சாா்பில் துப்புரவுப் பணியாளா்கள், டெங்கு ஒழிப்புப் பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், சுகாதார பணியாளா்கள் உள்ளிட்ட 40 போ் கொண்ட மூன்று குழுவினா் வீடு, கடை, பேக்கரி, தொழிற்சாலையை ஆய்வு செய்து அதில் டெங்கு லாா்வா புழுக்கள் உள்ளதா? எனக் கண்டறிந்து, அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினா்.

இந்தக் குழுக்கள் சுழற்சிமுறையில் பேரூராட்சி பகுதியில் டெங்கு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதுபோல இடங்கணசாலை பரமகவுண்டனூா் பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குனா் முருகன், இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலா் மேகநாதன் ஆகியோா் கொண்ட குழுவினா் டெங்கு ஒழிப்புப் பணியை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். வீடு, கடைகளில் ஆய்வின்போது டெங்கு லாா்வா புழுக்கள் காணப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com