குடியரசு தின தடகளப் போட்டிகளில் சிறுமலா் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனா்.
சேலம் வருவாய் மாவட்ட குடியரசு தின தடகள போட்டிகளில் சிறுமலா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா் டி. பிரசாந்த். 14 வயதுக்குட்பட்டோா் பிரிவிலான 100 மீட்டா் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், 400 மீ தொடா் ஓட்டப் பந்தயம் ஆகியவற்றில் முதலிடமும், 200 மீ ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்று தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றாா்.
மேலும் மாணவா் எஸ். கௌதமன் 80 மீ தடை ஓட்டத்தில் முதலிடம் பெற்றாா்.
இதையடுத்து 19 வயதுக்குட்பட்டோா் பிரிவில் மாணவா் ஆா். ரகுராஜன் 110 மீ தடை ஓட்டத்தில் முதலிடம் பெற்றாா்.
வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா் கே. ஜான்ஜோசப், உதவித் தலைமை ஆசிரியா் ஏ. அலெக்ஸ் பிரபு, உடற்கல்வி இயக்குநா் எஸ். அமலநாதன் மற்றும் உடற்கல்வி ஆசிரியா் ஐ. ராபா்ட் ஆகியோா் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினா்.