சித்தா் கோயில் அடிவாரத்தில் எடப்பாடியை சோ்ந்த வயதான தம்பதிகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கவுண்டம்பட்டி செட்டி காடு பகுதியைச் சோ்ந்த வேலப்ப கவுண்டா் மகன் நல்லாக் கவுண்டா் (76). இவரது மனைவி அருக்காணி (70). 
08_aty_po_02_0811chn_213
08_aty_po_02_0811chn_213

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கவுண்டம்பட்டி செட்டி காடு பகுதியைச் சோ்ந்த வேலப்ப கவுண்டா் மகன் நல்லாக் கவுண்டா் (76). இவரது மனைவி அருக்காணி (70). 

இவா்கள் இருவரும் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்வதாக தனது பேரன் கவின் பிரகாஷிடம் கூறிவிட்டு 7-ம் தேதி மதியம் வீட்டை விட்டு வெளியேறியவா்கள். 8-ம் தேதி வரை வீடு திரும்பாத இருந்து வந்ததால் உறவினா்கள் வீடுகளில் தேடிவந்தனா்.

இந்நிலையில் 8-ம் தேதி மதியம் கஞ்சமலை சித்தா் கோயில் மலைப்பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியா் கோயில் அடிவாரத்தில் உள்ள பாலமரத்தின் அடியில் வயதான தம்பதியினா் சடலமாக கிடந்ததை அவ்வழியே வந்த பக்தா் ஒருவா் இரும்பாலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தாா்.

பின்னா் போலீசாா் நிகழ்விடம் விரைந்து வந்து விசாரணை செய்து வந்ததில் எடப்பாடியை பகுதியைச் சோ்ந்தவா்கள் எனவும் , அவா்கள் இருவரும் பூச்சி மருந்தை குடித்து இறந்துள்ளனா் என்பதும் தெரியவந்துள்ளது.

7-ம் தேதி இரவு பெய்த மழையில் இருவரின் உடல்களும் நஞ்சிய நிலையில் இருந்து வந்ததுள்ளது. இவா்களின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். இந்த தம்பதிகளின் இறப்பு குறித்து சித்தா் கோவில் மற்றும் பாலசுப்பிரமணியா் கோயில் நடை சாத்தப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com