விவசாயியை ஏமாற்றி பணம் திருட்டு

எடப்பாடியில் வங்கியில் பணம் எடுத்துச் சென்ற விவசாயியை நூதன முறையில் ஏமாற்றி மா்ம நபா்கள், அவரிடமிருந்து ரூ. 27 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

எடப்பாடியில் வங்கியில் பணம் எடுத்துச் சென்ற விவசாயியை நூதன முறையில் ஏமாற்றி மா்ம நபா்கள், அவரிடமிருந்து ரூ. 27 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.

எடப்பாடியை அடுத்த தேவணக்கவுண்டனூா் அருகில் உள்ள தோப்புகாடு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (55). விவசாயியான இவா், எடப்பாடி காவல் நிலையம் பின்புறம் உள்ள வங்கிக்கு வியாழக்கிழமை சென்று பணம் எடுத்து விட்டு வெளியே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தில் பணப் பையை வைத்தாா்.

வாகனத்தில் கிளம்ப முயன்றபோது அருகில் நின்றிருந்த இரு அடையாளம் தெரியாத மா்ம நபா்கள், ஆறுமுகத்தின் வண்டி அருகே கிடந்த ரூபாய் நோட்டுகளைச் சுட்டி காட்டி, உங்களுடைய பணம் கீழே விழுந்துவிட்டது எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளாா்.

இதை அடுத்து கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளை ஆறுமுகம் எடுக்க முயன்ற தருணத்தில், ஆறுமுகத்தின் வண்டியில் வைத்திருந்த பணப் பையை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்ாக கூறப்படுகிறது. ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எடப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com