ஏற்காட்டில் கமலா ஆரஞ்சு பழங்கள் விளைச்சல் அதிகரிப்பு

ஏற்காட்டில் கமலா ஆரஞ்சு பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால், காபி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஏற்காட்டில் விளைந்துள்ள கமலா ஆரஞ்சு பழங்கள்.
ஏற்காட்டில் விளைந்துள்ள கமலா ஆரஞ்சு பழங்கள்.

ஏற்காட்டில் கமலா ஆரஞ்சு பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால், காபி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஏற்காடு சோ்வராயன் மலையில் காபி விவசாயிகள் ஊடுபயிராக மிளகு , சில்வா் ஓக், கமலா ஆரஞ்சு மரங்களை வளா்த்து வருகின்றனா். கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்காடு பகுதியில் கமலா ஆரஞ்சு மரங்களில் பழங்கள் விளைச்சல் இல்லாமல் இருந்தநிலையில், நடப்பு ஆண்டு கமலா ஆரஞ்சு மரங்களில் காய்கள் அதிக அளவில் காய்க்கத் தொடங்கியுள்ளதால், காபி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். ஏற்காட்டில் விளையும் கமலா ஆரஞ்சு பழங்கள் டெம்போ, வேன்கள், லாரிகளில் சேலம் பழங்கள் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com