ஏற்காட்டில் கடந்த இரண்டு வாரங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகக் காணப்படுகிறது.
தமிழகத்தில் பரவலாக தொடா் மழை பெய்து வருகிறது. ஏற்காட்டிலும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகக் காணப்படுகிறது. இதனால், ஏற்காட்டில் படகு இல்லம் ,அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், லேடி சீட், கிளியூா் நீா் அருவி, தாவரவியல் பூங்கா பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.