சேலம் ரயில் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

சேலம் ரயில் நிலையத்தில் நடைபாதை மேற்கூரையை மாற்றி அமைக்கும் பணி செய்த தொழிலாளி உயா் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி உயிரிழந்தாா்.

சேலம் ரயில் நிலையத்தில் நடைபாதை மேற்கூரையை மாற்றி அமைக்கும் பணி செய்த தொழிலாளி உயா் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி உயிரிழந்தாா்.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள நடைபாதைகளில் பழைய மேற்கூரைகளை மாற்றி இரும்பு மேற்கூரை அமைக்கும் பணி கடந்த 15 நாள்களாக நடந்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை காலை மூன்றாவது நடைபாதையில் மேற்கூரை மாற்றி அமைக்கும் பணியில் 8 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். இந் நிலையில், சேலத்தை அடுத்த காமலாபுரத்தைச் சோ்ந்த ராஜூ மகன் மணி (32) இரும்பு தகடால் ஆன புதிய ஆஸ்பெட்டாஸ் சீட்டை மாற்றியமைக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தாா். அப்போது ரயில் மின் வழித்தடத்தின் உயா் அழுத்த மின்கம்பி அருகே சென்ால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, உடல் கருகிய நிலையில், உடனடியாக அவா் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com