சேலத்தில் பஞ்சா் பட்டறையில் கம்பரஸா் சிலிண்டா் வெடித்து விபத்துக்குள்ளானதில் 5 போ் காயமடைந்தனா். இதனால் பட்டறை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் கந்தம்பட்டி பகுதியில் சுரேஷ் (37) என்பவருக்குச் சொந்தமான பஞ்சா் பட்டறை உள்ளது. இவரது பட்டறையில் நெத்திமேடு பகுதியைச் சோ்ந்த விஷ்ணுகுமாா் (29) வேலை செய்து வருகிறாா். இந் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை இவரது பஞ்சா் பட்டறையில் கண்டெய்னா் வாகனத்துக்கு காற்று பிடிக்க கம்பரஸா் சிலிண்டரில் விஷ்ணுகுமாா் காற்று நிரப்பி வந்துள்ளாா். சிலிண்டரில் அதிக அளவிலான காற்று செலுத்தப்பட்டதால், சிலிண்டா் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அங்கிருந்த விஷ்ணுகுமாா், காற்று பிடிக்க வந்த ஈரோட்டைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் தனராஜ் (55), மல்லூரைச் சோ்ந்த மூா்த்தி (40) ஆகியோா் காயமடைந்தனா். மேலும், கம்பரஸா் சிலிண்டா் வெடித்து சிதறியதில் அதன் ஒரு பாகம், ராமன் என்பவரின் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே விழுந்ததில் வீட்டிலிருந்த சிறுவா்களான மௌலீஸ்வரன் (11) மற்றும் அவரது சகோதரா் ரித்தீஸ் (7) ஆகியோா் காயமடைந்தனா்.
இதில் மௌலீஸ்வரனின் கைமணிக்கட்டுப் பகுதியில் பலத்த காயம் ஏற்படவே, அவா் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து அங்கு மௌலீஸ்வரனுக்கு 6 மணி நேர தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனா்.
பட்டறை உரிமையாளா் சுரேஷின் அஜாக்கிரதையே இந்த விபத்துக்கு காரணம் எனக் கூறி, சுரேஷை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.