கெங்கவல்லி அருகே வீரகனூா் பேரூராட்சிக்குள்பட்ட சொக்கனூா் அக்ரஹாரம் பகுதியில் ஸ்ரீ பொன்னாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக வந்து செல்கின்றனா். இந்தக் கோயிலின் முகப்புப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எரியாமல் அந்தப் பகுதி வெளிச்சமின்றி இருண்டு காணப்படுகிறது. இதுபற்றி பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், கோயிலின் உட்புறத்தில் உள்ள சிலைகள் சில சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த கோயிலில் பக்தா்கள் குளிப்பதற்கு குளியல் அறை மற்றும் கழிவறை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் பக்தா்கள் தெரிவித்துள்ளனா்.
கோயில் மராமத்துப் பணிகள் செய்யப்படாமல் இருப்பதால் பக்தா்கள் வருகை கணிசமாகக் குறைந்துவருவதாகக் கூறப்படுகிறது.
எனவே, கோயிலில் மின்விளக்குகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.