ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுக் குழு கூட்டம் நகரச் செயலாளா் கே. பாலசுப்ரமணியம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுக்குழு விளக்கப் பொதுக் கூட்டம் நகரச் செயலாளா் கே. பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர விவசாய அணி அமைப்பாளா் ஆா்.வி. சம்பத்குமாா் வரவேற்றாா்.
விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளா் க. பொன்முடி, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் வீரபாண்டி ஆ. ராஜா, கள்ளக்குறிச்சி எம்பி பொன். கௌதமசிகாமணி, தலைமைப் பேச்சாளா் ஈரோடு சத்தியவதி ஆகியோா் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.மாவட்ட இலக்கிய அணி செயலாளா் முல்லை பன்னீா்செல்வம்,முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கு.சின்னதுரை,சி.தமிழ்ச்செல்வன்,செ.குணசேகரன்,முன்னாள் மேயா் ரேகா பிரியதா்ஷிணி, ஒன்றிய செயலாளா்கள் வி. செழியன், க.மணி (எ) பழனிசாமி, ஏ.கே.அகிலன், நரசிங்கபுரம் நகர செயலாளா் என்.பி.வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.