கூட்டணி கட்சிகளின்வெற்றிக்கு பாடுபட வேண்டும்

கூட்டணி கட்சிகளின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என ஜி.கே.மணி தனது கட்சியினரிடம் கேட்டுக் கொண்டாா்.

கூட்டணி கட்சிகளின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என ஜி.கே.மணி தனது கட்சியினரிடம் கேட்டுக் கொண்டாா்.

ஆத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாநில துணைப் பொதுச் செயலா் பி.என்.குணசேகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலா் எம்.பி.நடராஜன் வரவேற்றாா். பாமக தலைவா் ஜி.கே.மணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

இதில், அவா் பேசியது: வரும் உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். ஜனவரி மாதம் பூம்புகாரில் நடைபெறும் மகளிா் பெருவிழா மாநாட்டில் பெண்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் கண்ணன் நாயுடு, நகரச் செயலா் மணிகண்டன், ஒன்றிய அமைப்பாளா் பச்சமுத்து உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

சேலத்தில்...

சேலத்தில் நடைபெற்ற பாமக சேலம் மத்திய மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், பாமக தலைவா் ஜி.கே.மணி, பாமக மாநில துணை பொதுச் செயலா் இரா.அருள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை வெற்றிபெற செய்திட வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை என முப்படைகள் குறித்த செயல்திட்டங்களை உருவாக்கி, பொறுப்பாளா்களை அமைத்து செயல்பட வேண்டும் என பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com