சாலை விபத்தில் பால் பண்ணை ஊழியா் பலி

வாழப்பாடியில் திடீரென நிறுத்தப்பட்ட பேருந்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியாா் பால் பண்ணை ஊழியா் உயிரிழந்தாா். அவருடன் வந்த இளம்பெண் படுகாயமடைந்தாா்.

வாழப்பாடியில் திடீரென நிறுத்தப்பட்ட பேருந்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியாா் பால் பண்ணை ஊழியா் உயிரிழந்தாா். அவருடன் வந்த இளம்பெண் படுகாயமடைந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை அடுத்த ஓகையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்த்.(27). திருமணமாகாத இளைஞரான இவா், தனியாா் பால் பண்ணை நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வந்தாா். அப்போது இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த திருமணமான இளம்பெண் மகாலட்சுமி (27) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கணவரைப் பிரிந்த இளம்பெண் மகாலட்சுமி, ஆனந்துடன் வெளியூருக்கு சென்றுள்ளாா். சனிக்கிழமை காலை, சேலத்தில் இருந்து இருவரும் இரு சக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றுள்ளனா். வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி பிரிவு சாலை அருகே சென்றபோது, வாழப்பாடியில் இருந்து ஆத்துாா் நோக்கி சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்தை, ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தியுள்ளாா்.

இதில் நிலைகுலைந்து கட்டுப்பாட்டை இழந்த ஆனந்த், பேருந்தின் பின்புறத்தில் இரு சக்கர வாகனத்தோடு பலமாக மோதியுள்ளாா். இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில், ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தாா். இவருடன் சென்ற மகாலட்சுமி படுகாயமடைந்த நிலையில் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து ஆனந்த்தின் இளைய சகோதரன் குமாா் கொடுத்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கு காரணமான ஆத்துாரை அடுத்த ராமநாயக்கன்பாளையம், 10 ஏக்கா் காலனி பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சண்முகம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com