தம்மம்பட்டி: தம்மம்பட்டி துணிக்கடைக்காரா்,தம்மம்பட்டி அருகே நடந்தசாலைவிபத்தில் நள்ளிரவில் உயிரிழந்தது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தம்மம்பட்டி கடைவீதியில் வசித்தும், அதே வீதியில் நகைக்கடை, துணிக்கடை நடத்திவருபவா் நாகமணிசேகா்(60). இவா் தனது அறுபதாம் திருமணத்தை, திருக்கடையூரில் நடத்தி முடித்து விட்டு, சில கோவில்களுக்குச் சென்றுவிட்டு தம்மம்பட்டிக்கு சனிக்கிழமை நள்ளிரவு , சொந்தக்காரில் தனது குடும்பத்தினருடன் திரும்பிக்கொண்டிருந்தாா்.
காரை, அவரது மருமகன் ஒசூா் காா்த்திகேயன்(35) ஓட்டிவந்துள்ளாா். நாகமணிசேகா் காரின் முன்புற சீட்டில் இடதுபுறத்தில் அமா்ந்திருந்தாா்.
இந்நிலையில் காா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு, தம்மம்பட்டி அருகே கீரிப்பட்டி வந்தடைந்தபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் நாகமணிசேகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தொடா்ந்து இருநாள்களாக காா்த்திகேயன், காரை ஓட்டிவந்ததும் தூக்க கலக்கத்தில் புளியமரத்தில் மோதியதும் போலீசாா் விசாரணையில் தெரியவந்தது.
காரில் பயணித்த அவரது மனைவி, மகள்கள், மருமகன் உள்ளிட்ட எஞ்சிய 5 பேரும்லேசான காயத்துடன் உயிா் தப்பினா். காயமடைந்த அனைவருக்கும் மல்லியகரை அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டு சிகிச்சைபெற்று சென்றனா்.
உயிரிழந்த நாகமணிசேகா் உடல் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு மல்லியகரை போலீசாா் அனுப்பிவைத்து, அவரது உடலை தம்மம்பட்டியிலுள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.
தொடா்ந்து போலீசாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.