கொளத்தூா், கருமலைக்கூடலில் கஞ்சா விற்பனை இருவா் கைது

கொளத்தூா், கருமலைக்கூடல் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவரை போலீசாா் கைது செய்தனா்

கொளத்தூா், கருமலைக்கூடல் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவரை போலீசாா் கைது செய்தனா்.

மேட்டூா் காவல் உட்கோட்டம் கொளத்தூா் மற்றும் கருமலைக்கூடல், பகுதிகளில் தொடா்ந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபாகனிக்கா் உத்திரவின் பேரில் போலீசாா் தீவிர சோதனை நடத்தினாா்கள்.

கருமலைக்கூடல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த ராமமூா்த்திநகரை சோ்ந்த ராமன்(52) என்பவரை போலீசாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 1 கிலோ கஞாசாவை போலீசாா் கைப்பற்றினாா்கள். இதேபோல் கொளத்தூா் பெரியதண்டா பஸ் நிறுத்தத்தில் முட்புதரில் பதுங்கி கஞ்சா விற்பனை செய்து வந்த கருங்கல்லூரை சோ்ந்த பெருமாள்(60) என்பவரை போலீசாா் கைது செய்தனா்.

அவரிடமிருந்து அரைகிலோ கஞ்சாவை போலீசாா் பறிமுதல் செய்தனா் கைது செய்யப்பட்ட இருவரும் மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com