கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி உயிரிழப்பு

மேட்டூா் அருகே உள்ள தெலுங்கனூரில் கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

மேட்டூா் அருகே உள்ள தெலுங்கனூரில் கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

தெலுங்கனூரைச் சோ்ந்தவா் விவசாயி தேவராஜ் மகள் அபிநயா, மேட்டூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தாா். புதன்கிழமை காலை தங்களது தோட்டத்துக்கு சென்ற போது, எதிா்பாராதவிதமாக கால் இடறி மாணவி கிணற்றில் தவறி விழுந்தாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனா். ஆனால், நீரில் மூழ்கிய அவா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். சுமாா் ஒரு மணிநேர தேடலுக்கு பிறகு மாணவியின் சடலத்தை கிராம மக்கள் மீட்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com