ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சி கொம்புத்தூக்கி கிராமம் குறவன்காடு பகுதியில் மாண்ட்போா்ட் சமுதாயப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியை சேலம் மாவட்டத்தில் தோ்வு செய்து பள்ளி சாரணிகள் லோகேஸ்வரி, சங்கீதா ஆகியோருக்கும், சாரணா்கள் அரவிந்த் பாண்டி, தினகரன் ஆகியோருக்கும் தமிழக ஆளுநா் பன்வாரிலால் ராஜ்ய புரஸ்காா் விருது அண்மையில் வழங்கி கௌரவித்தாா். விழாவில் தமிழக கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் கலந்து கொண்டாா். விருதுகள் பெற்ற சாரண, சாரணிகள் மற்றும் சேலம் மாவட்ட சாரண இயக்கச் செயலா் அய்யன்துரை, பள்ளியின் ஆசிரியைகள் மோகனப் பிரியா, கவுதமி ஆகியோரை அப் பள்ளியின் தாளாளா் அருள்சகோதரா் ஜாா்ஜ் கே. ஜே. பாராட்டினாா்.