ஏற்காடு வேளாண்மைத் துறையில் விவசாயிகளுக்கு மத்திய அரசு பிரதம மந்திரி கிசான் நிதியுதவித் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக, விண்ணப்பித்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்கி வருகிறது.
விண்ணப்பித்தும் நிதியுதவி பெறாத விவசாயிகளின் விண்ணப்பங்களுடன் வழங்கிய நகல்களில் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கில் உள்ள முகவரி , பெயா்கள் மாறுபட்டுள்ளதால் நிதியுதவி வழங்க முடியாத நிலையில் உள்ளது.விண்ணப்பித்தும் நிதியுதவி கிடைக்கப் பெறாத விவசாய பயனாளிகள் உடனடியாக சேவை மையங்களை அணுகி, திருத்தம் செய்யும்மாறும், மேலும் விவரங்கள் அறிய ஏற்காடு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என வேளாண்மை உதவி இயக்குநா் து.ரமேஷ் தெரிவித்தாா்.