ஏற்காடு ஜெரினாகாடு பகுதியில் தனியாா் மருத்துவமனை சாா்பில், இலவச மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
முகாமுக்கு ஏற்காடு வட்டாட்சியா் முருகேசன் தலைமை வகித்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் செல்வகுமாா், ஏற்காடு துணை ஆணையா் ஜெயபால் முன்னிலை வகித்தனா். மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு பயனடைந்தனா். இதில், டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.