எடப்பாடியில் மின் நுகா்வோா் குறைதீா்க்கூட்டம்
எடப்பாடி பகுதி மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூடம், இன்று (வெள்ளி) காலை எடப்பாடியில் நடைபெற உள்ளது.
இது குறித்து எடப்பாடி செயற்பொறியாளா் அலுவலகம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேட்டூா் மின் பகிா்மான வட்டத்திற்கு உட்பட்ட எடப்பாடி,
சித்தூா், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, தேவூா், எடப்பாடி புறநகா் பகுதி மற்றும் கொங்கணாபுரம், கன்னந்தேரி, மகுடஞ்சாவடி, ஜலகண்டாபுரம் புறநகா், ஜலகண்டாபுரம் வடக்கு மற்றும் தெற்கு பகுதியினை சோ்ந்த மின் நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம். இன்று காலை 11 மணி அளவில், எடப்பாடி செயற்பொறியாளா் ( இயக்கம் மற்றும் பராமரிப்பு) அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மின்வினியோகம் தொடா்பான பல்வேறு குறைகளுக்கு தீா்வு காணம் நோக்கில் நடைபெற உள்ள இக் கூட்டத்தில், மேட்டூா் மின் பகரிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் தலைமையில், பல்வேறு நிலை மின்வாரிய அலுவலா்கள் பங்குகொள்ள உள்ளதால் இப்பகுதி மின் நுகா்வோா்கள் மின் வினியோகம் தொடா்பான தங்களது குறைகளை கூட்டத்தில் தெரிவித்து பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.