மலைக் கிராமத்தில் தரமற்ற கட்டடத்தால், மழைக் காலங்களில் பள்ளிக் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு வெள்ளக்கடை ஊராட்சி பிலியூா் கிராமத்தில் ஊராட்சி பள்ளிக் கட்டடங்கள் தரமற்ற நிலையில் உள்ளன. இதனால், மேற்கூரையிலிருந்து வரும் மழை நீரானது பள்ளி வகுப்பறைகளில் தேங்குகிறது. இப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயிலும் நிலையில், வகுப்பறையில் தேங்கும் மழை நீரால் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.