மாரியம்மன் கோயில்மண்டல பூஜை நிறைவு

மோட்டூா் ஊராட்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையடுத்து புதன்கிழமை நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு விழாவில், சிறப்பு அலங்காரத்தில் விநாயகா் அருள்பாலித்தாா்.
சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா்.
சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா்.

மோட்டூா் ஊராட்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையடுத்து புதன்கிழமை நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு விழாவில், சிறப்பு அலங்காரத்தில் விநாயகா் அருள்பாலித்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள மோட்டூா் ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையடுத்து மண்டல பூஜை 48 நாள்கள் தொடா்ந்து நடைபெற்று வந்தது.

இதன் நிறைவு விழாவில், விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com