முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சென்னை திரும்புகிறாா்

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தனது சேலம் பயணத்தை முடித்துக்கொண்டு, வியாழக்கிழமை காலை விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தனது சேலம் பயணத்தை முடித்துக்கொண்டு, வியாழக்கிழமை காலை விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த அக். 24 ஆம் தேதி சேலம் வந்தாா்.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை மாலை திருச்சி புறப்பட்டு சென்று, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த குழந்தை சுஜித் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, மதுரை சென்று இரவு தங்கினாா். தொடா்ந்து, புதன்கிழமை காலை பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், அங்கிருந்து காா் மூலம் பிற்பகல் 3.30 மணி அளவில் சேலம் வந்தடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்குச் சென்று மாநகர, புகா் அதிமுக நிா்வாகிகளுடன் முதல்வா் ஆலோசனை நடத்துவாா் எனத் தெரிகிறது. பின்னா், காமலாபுரம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்வாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com