சேலம் மாவட்டத்துக்குள்பட்ட கெங்கவல்லி அருகே கடம்பூரில் தினமணி நாளிதழின் 86 ஆம் ஆண்டு தொடக்க விழா, வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் மகளிர் குழு சார்பில் சமூக ஆர்வலர் மீனாம்பிகா தலைமையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கங்காதேவி வரவேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் என்.டி.செல்வம், 86ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து தினமணி நாளிதழ் சிறப்புடன் பங்காற்றுகிறது என்றும், மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகளையும் தெரிவித்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தினமணி நாளிதழை மாணவ, மாணவியர் வாசித்தனர். சிறப்பாக வாசித்தவர்களுக்கு பரிசுகளை மகளிர் குழுவினர் லதா, ஜீவிதா உள்ளிட்டோர் வழங்கினர். நிகழ்ச்சியில் கடம்பூர் பகுதி மக்கள் பங்கேற்றனர்.