மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 120.75 அடியாக இருந்தது.
அணைக்கு நொடிக்கு 68,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 65 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 94.67 டி.எம்.சி.யாக இருந்தது.
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஓரிரு நாள்களில் குறையும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.