ஏற்காடு பேருந்து நிலையத்தை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷணன் திங்கள் கிழமை ஆய்வு செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்ற அவர் பேருந்து நிலையத்தில் கழிப்பறைகளை சுகாதாரமாக வைக்குமாறு கேட்டுக் கொண்டார். பேருந்து நிலையம் மாடுகளும், மாட்டு சாணங்களுமாகக் காணப்பட்டதால், மாவட்ட ஆட்சியர், ஆணையர், அதிகாரிகளை அழைத்துச் சென்று சுற்றுலாப் பகுதிகளை தூய்மையாக வைக்குமாறு உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சி. அ. ராமன், ஏற்காடு ஆணையர் ராமச்சந்திரன், வட்டாட்சியர் முருகேசன் உடனிருந்தனர்.